ஸ்மைல் பக்கம்











{ஏப்ரல் 17, 2007}  

நண்பர்களே நான்  முன்னர் குறிப்பிட்டதன் படி வருகிற 22ஆம் தேதி (ஞாயிறுமதுரையில் பாலியல் சிறுபான்மையினர் குறித்த திரைப்பட விழாவினை நடத்த உள்ளோம்.  அதற்கான அழைப்பிதழே கீழே இணைக்கப்பட்டுள்ளது. 


(பெரியாதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)


(பெரியாதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)


(பெரியாதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

அயல் நாடுகளில் அங்காங்கே நடந்து வரும் இத்தகைய திரைப்பட விழாவினைப் போல இந்தியாவில் இத்தகைய நிகழ்வு இதுநாள்வரை இல்லை.  அங்காங்கே திரையார்வளர்கள் நடத்தும் விழாக்களும் குரசோவா திரைப்படவிழா, அல்மத்தோர் திரைப்பட விழா என்பதாக சிறந்த இயக்குநர்களின் திரை வரிசை விழாக்களாகவோ அல்லது போட்டி விழாக்களாகவோ தான் நிகழ்கின்றன.  அதுவும் குறிப்பிட்ட பார்வையாளர்களையே சேர்கின்றன.  இதுநாள் வரை கவனிப்பாரின்றி இருந்த விளிம்புகளின் விழாவாக அதுவும் திருநங்கைகளின் விழாவாக ஒரு திரைப்பட விழாவும் இருந்ததில்லை என்னும் நிலையில் திருநங்கைகள் குறித்த சித்தனை ஓட்டத்தை திறந்து வைக்கும் விதமாக இவ்விழாவினை ஏற்பாடு செய்கிறோம்.
எனது இம்முயற்சிக்கு பொருளாதார மற்றும் செயல்பாட்டு உதவி அளித்து வந்த கீதா-இளங்கோ தம்பதியர்க்கும், அவர்களது சுடர் தன்னார்வ அமைப்பிற்கும்எனது நன்றிகள். நிகழ்வுக்கு அரங்கினை இலவசமாக தந்துதவிய தமிழ்நாடு இறையியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், இவ்விழாவிற்கான படங்கள் பெற்றுத்தர உதவிய நண்பர் சாலைச் செல்வம் அவர்களுக்கும். மேலும் சில படங்கள் தந்துதவிய நமது வலைப்பூ நண்பர்களான நரேன், பாஸ்டன் பாலா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் அனைவரும் இதனை ஒரு நேரடி அழைப்பாக ஏற்று கண்டிப்பாக நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். 

நன்றி!!
பி.கு.
###  ஏப்ரல் 22ல் வேறு எந்த மொக்கை நிகழ்வு இருந்தாலும், அதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மதுரைக்கு பஸ்ஸப் புடிச்சு வாங்கப்பு!!



மறுமொழி இடுக

நீங்கள் எத்தகையவராக இருக்க வேண்டும் புகுபதிந்து உள்ளீர்கள் பின்னுாட்டம் இட

et cetera